இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வு!

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக ‘வோல்வோ’ இந்தியா குழும நிர்வாக இயக்குநர் கமல் பாலி, துணைத் தலைவராக கோவை சந்திரா டெக்ஸ்டைல்ஸ், நிர்வாக இயக்குநர் நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ‘சிஐஐ’ அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்பிராந்திய நிர்வாகிகள் தேர்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், தலைவராக ‘வோல்வோ’ குழுமம் இந்தியா நிர்வாக இயக்குநர் கமல் பாலியும், துணைத் தலைவராக கோவை சந்திரா டெக்ஸ்டைல்ஸ், நிர்வாக இயக்குநர் நந்தினியும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிஐஐ தமிழ்நாடு தலைவர், சிஐஐ இந்தியாவின் பெண்கள் பிரிவு தலைவர், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின்(என்ஐடி) ஆளுநர்கள் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்த நந்தினி, தற்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (டிட்கோ) தனி இயக்குநராக உள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...