உடுமலை-கொழுமம் சாலை ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல் : மேம்பாலம் அமைக்க கோரிக்கை

உடுமலை அடுத்த கொழுமம் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த சாலையில், நேரத்திற்கு பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதால், மேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை பகுதியில் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கொழுமம், குமரலிங்கம் வழியாக பழனி செல்லும் வழித்தடம் முக்கிய சாலையாக உள்ளது.

குமரலிங்கம் பகுதியில் உள்ள 1000 ஆண்டுகள் கடந்த காசி விஸ்வநாதர் கோவில், பழமை வாய்ந்த தாண்டேஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் அமராவதி அணைப்பகுதிக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த வழித்தடத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

இதுதவிர ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளை பொருட்களை விற்பனை செய்வதற்காக நகரத்துக்கு கொண்டு வரவும் இந்த சாலை பயன்பட்டு வருகிறது. மேலும் பல குடியிருப்புகளுக்கு செல்லும் வழித் யில் உள்ளது. தடமாகவும் இது உள்ளது. இதனால் தினசரி ஏராளமான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.



ரயில் போக்குவரத்துக்காக இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும் சமயங்களில் ஏராளமான வாகனங்கள் சாலையில் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவசர வேலைகளுக்காக செல்பவர்கள் ரயில்வே கேட் திறக்கும் வரை தவிப்புடன் காத்திருக்கும் நிலை உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர முடியாத நிலை ஏற்படுகிறது.



இருசக்கர மற்றும் ஆட்டோ உள்ளிட்ட சிறியரக வாகனங்கள் செல்லும் வகையில் இந்த பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. ஆனால் நீண்ட நாட்களாக அந்த பாதை பராமரிக்கப்படாததால் சேறும், சகதியுமாகவும் புதர் மண்டியும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.



இதனால் ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நிற்கும் நிலை உள்ளது. இனிவரும் காலங்களில் உடுமலை வழியாக செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் போது இந்த சாலை வழியிலான போக்குவரத்து மிகவும் கடினமானதாக மாறி விடும்.எனவே கொழுமம் சாலை ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல் கட்டமாக இந்த பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...