உடுமலை சுற்றுவட்டாரத்தில் கன மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் காலை முதல் விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பருவமழை மாற்றம், சீதேஷ்ண நிலை காரணமாக மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.



இந்நிலையில் இன்று காலை முதல் உடுமலை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், விட்டு விட்டுச் சாரல் மழை பெய்து வந்தது. தற்போது இடைவிடாமல் கன மழை பெய்து வருவதால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது,



வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே ஓரமாக நிறுத்தி மழையில் நனையாதபடி வணிக வளாகங்களில் தஞ்சமடைந்தனர். இடைவிடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...