உடுமலை அருகே பாஜக சார்பில் மருத்துவ காப்பீட்டு முகாம் - 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதிவு!

உடுமலை அடுத்த பூலாங்கிணறு அருகேயுள்ள கென்னடி நகர் பகுதியில் பாஜக விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் இலவச ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு முகாமில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்யப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு பகுதியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் மத்திய அரசின் இலவச ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. கென்னடி நகர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, விவசாய அணி சமூக ஊடகப் பிரிவு தலைவர் மோகன் பிரசாத் தலைமை தாங்கினார்.



இந்த மருத்துவ காப்பீட்டு முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு அயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்யப்பட்டது.



இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராகவன், விவசாய அணி மாநில செயலாளர் மௌனகுருசாமி, கிளை பொறுப்பாளர் சேகரன், ரங்கநாதன், லோகேஸ்வரன், உடுமலை மேற்கு ஒன்றிய ஆன்மீக பிரிவு தலைவர் திருமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஷ்,

தொழில் பிரிவு நகர தலைவர் உடுமலை ராமராஜ், சின்ராஜ் கதிரவன் லோகேஷ் சித்தார்த் வேலுச்சாமி ராஜேஷ்குமார் சிவலிங்கம் மற்றும் பூலாங்கிணறு பாஜகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...