உடுமலை அருகே பாஜக சார்பில் மருத்துவ காப்பீட்டு முகாம் - 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதிவு!

உடுமலை அடுத்த பூலாங்கிணறு அருகேயுள்ள கென்னடி நகர் பகுதியில் பாஜக விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் இலவச ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு முகாமில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்யப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு பகுதியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணியின் சமூக ஊடகப்பிரிவு சார்பில் மத்திய அரசின் இலவச ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. கென்னடி நகர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, விவசாய அணி சமூக ஊடகப் பிரிவு தலைவர் மோகன் பிரசாத் தலைமை தாங்கினார்.



இந்த மருத்துவ காப்பீட்டு முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு அயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்யப்பட்டது.



இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராகவன், விவசாய அணி மாநில செயலாளர் மௌனகுருசாமி, கிளை பொறுப்பாளர் சேகரன், ரங்கநாதன், லோகேஸ்வரன், உடுமலை மேற்கு ஒன்றிய ஆன்மீக பிரிவு தலைவர் திருமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஷ்,

தொழில் பிரிவு நகர தலைவர் உடுமலை ராமராஜ், சின்ராஜ் கதிரவன் லோகேஷ் சித்தார்த் வேலுச்சாமி ராஜேஷ்குமார் சிவலிங்கம் மற்றும் பூலாங்கிணறு பாஜகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...