வால்பாறை நகராட்சி கூட்டம் - கோடை விழா உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த வார்டு உறுப்பினர்கள்!

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு கவுன்சிலர்கள், மே மாதம் கோடை விழா நடத்த வேண்டும், காட்சி முனை மாடம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.



கோவை: வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கோடை விழா நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரம் வள்ளி, துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில், ஆணையாளர் பாலு முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 21 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வட்டார் பால்ஷ் மற்றும் வேவர்லி பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட காட்சி முனை மாடம் அமைக்க வேண்டும், அனைத்து வார்டு பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், ரேஷன் கடைகளை பராமரிப்பு செய்து தர வேண்டும்,

தெரு விளக்கு பராமரிப்பு பணியை மேற்கொள்ள கூடுதல் மின் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். வரும் மே மாதம் கோடை விழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



இதேபோல், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்து யானைகள் சேதப்படுத்திய சத்துணவு மையங்களை சரி செய்து தர வேண்டும், நகராட்சி மார்க்கெட் கடைக்காரர்களுக்கு வாடகை. பொதுமக்களின் வீட்டு வரியை 50% குறைக்க வேண்டும் நல்லமுடி பூஞ்சோலை சுற்றுலா தளத்தில் வாகன நிறுத்துமிடம், கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.

நெடுஞ்சாலை துறையில் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வார்டு உறுப்பினர்கள் சார்பில் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, வாட்டர் பால்ஸ் அரசு உயர்நிலைப்பள்ளி, சோலையார் நகர் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு சமையல் கூடம் கட்டுதல், மேலாண்மை திட்டம் விரிவாக்க பணியை மேற்கொள்ளுதல்.

தடுப்பு சுவர் கட்டுதல் கழிப்பிட பராமரிப்பு, சத்துணவு மைய பராமரிப்பு, சிறு பாலம் கட்டுதல், கிணறு அமைத்தல். கழிவு நீர் வடிகால் அமைத்தல், குடிநீர் குழாய் பராமரித்தல், பயணிகள் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...