தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம் - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில், காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


திருப்பூர்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரம் தாலுகா அலுவலக நுழைவாயில் முன்பாக இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக கடந்த 20 ஆண்டுகள் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். சரண்டர் விடுப்பு ஊதியம், ஊதியமற்ற நிலுவை உள்ளிட்ட ஜீவ காருண்யா கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், நூலகர் உள்ளிட்ட பணிகளுக்கு சிறப்பு காலம் வரை மற்றும் தொகுப்பு ஊதியம் மதிப்பூதியம் பெற்று வரும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...