பிரதமர் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ம் தேதி வருகிறார். மகா சிவராத்திரி தினமான அன்று 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலையை பிரதமர் திறந்து வைத்து பின்னர் பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் பிரதமர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோக மையம் செல்கிறார்.

பிரதமர் வருகையை ஒட்டி ஆலந்துரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடடுத்தப்பட உள்ளனர். மேலும், வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மலையடிவாரத்தை சுற்றிலும் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி இன்று கோவை வந்தார். தொடர்ந்து, ஈஷா யோகா மையம் என்ற அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...