கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்..! - சிபிஐ கட்சியினர் வலியுறுத்தல்

மடத்துக்குளம் அடுத்த கணியூர் பகுதியில் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மாணவர் விடுதி மற்றும் காவல்நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது, ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, உரிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



மடத்துக்குளம் அருகேயுள்ள கணியூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கவன ஈர்ப்பு தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். கிளை செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில், தாலுகா செயலாளர் கு சவுந்திரராஜன், மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் ரணதேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

பிரசாரத்தில் கணியூர் - காரத்தொழுவு சாலையில் மாணவர் விடுதி மற்றும் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும். 24 மணி நேரமும் செயல்படுவதாக கூறப்படும் கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

போதிய இட வசதி உள்ள நிலையில் மருத்துவமனையை தரம் உயர்த்தவும், உரிய மருத்துவர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் பேருந்து போக்குவரத்து உரிய அளவில் இல்லாத நிலையில் மகளிருக்கு இலவச பயண திட்டம் பயனில்லாமல் போகிறது.

எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணியூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும். மாலை நேரங்களில் பொது இடங்கள், கோவில் பகுதிகளில் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...