கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்கொன்று 7,579 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4,436 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1340 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு அறையினை ஆண்டுக்கு நான்குமுறை சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) குணசேகரன், மற்றும் அரசியல் கட்சிபிரமுகர்கள் உடனிருந்தனர்.
இந்த இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு அறையினை ஆண்டுக்கு நான்குமுறை சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) குணசேகரன், மற்றும் அரசியல் கட்சிபிரமுகர்கள் உடனிருந்தனர்.