கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு

கோவை நரசீபுரத்தை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் சபரிநாதன் (23). கடந்த 3 நாட்களுக்கு பி.கே புதூரில் தனியாக நின்ற போது, மதுபோதையிலிருந்த கிறிஸ்டோபர், வினித் ஆகிய இருவரும் சபரிநாதனை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை அருகே போதை ஆசாமிகள் கத்தியால் குத்தியதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியர் சபரிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் நரசீபுரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகன் சபரிநாதன் (23). இவர் கோவை மாநகராட்சி தெற்கில் குடிநீர் திறப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் குனியமுத்தூர் பி.கே புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் அருகில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த பி.கே.புதூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர், வினித் ஆகிய இரண்டு இளைஞர்கள் மது போதையில் சபரிநாதனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சபரிநாதனை உறவினர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கியிருந்த கிருஸ்டோபர் மற்றும் வினீத்தை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சபரிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...