கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு

கோவை நரசீபுரத்தை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் சபரிநாதன் (23). கடந்த 3 நாட்களுக்கு பி.கே புதூரில் தனியாக நின்ற போது, மதுபோதையிலிருந்த கிறிஸ்டோபர், வினித் ஆகிய இருவரும் சபரிநாதனை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை அருகே போதை ஆசாமிகள் கத்தியால் குத்தியதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியர் சபரிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் நரசீபுரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகன் சபரிநாதன் (23). இவர் கோவை மாநகராட்சி தெற்கில் குடிநீர் திறப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் குனியமுத்தூர் பி.கே புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் அருகில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த பி.கே.புதூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர், வினித் ஆகிய இரண்டு இளைஞர்கள் மது போதையில் சபரிநாதனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சபரிநாதனை உறவினர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கியிருந்த கிருஸ்டோபர் மற்றும் வினீத்தை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சபரிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...