அலகுமலை ஜல்லிக்கட்டு விவகாரம் - கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக கடந்த மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டம் ரத்தான நிலையில், இன்று வேலாயுதம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போலீசார் கலைக்க முயன்ற நிலையில் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள அலகுமலை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அலகுமலை ஊராட்சியில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டம் ரத்தான நிலையில், இன்று வேலாயுதம்பாளையம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் அலகுமலை ஊராட்சிக்குட்பட்ட சேமலை கவுண்டம்பாளையம், சுப்பையகவுண்டம்பாளையம், அலகுமலை, வேலாயுதம்பாளையம், கோவில்பாளையம், செட்டிப்பாளையம், கணபதிபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கூட்டம் ரத்தானது.



இந்த நிலையில், இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தினால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும், விவசாய பயிர்கள் சேதம் அடைவதாகவும் எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம் என கூறி ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழரின் பாரம்பரிய விளையாட்டை சட்டஒழுங்கு பிரச்சினை இல்லாமல் மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதியன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலேயே ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததால் அவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்ற போது இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



ஜல்லிக்கட்டு வேண்டாம் என ஒரு தரப்பினரும் வேண்டும் என ஒரு தரப்பினரும் கோஷங்கள் எழுப்பியதால் கிராம சபை கூட்டம் எந்தவித முடிவுகளும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

இதனிடையே, வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என செய்தி துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் கடந்த வாரம் அறிவித்த நிலையில் அறிவித்தபடி ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மீண்டும் கிராம மக்கள் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...