தாராபுரத்தில் சாலையை ஆக்கிரமித்து நின்ற வாகனங்களை அகற்றிய போலீசாருக்கு குவியும் பாராட்டு!

தாராபுரத்தில் அண்ணா சிலை முதல் பூக்கடை கார்னர் வரை சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக புகார் எழுந்ததால் அந்த வாகனங்களை அதிரடியாக அகற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட வாகனங்களை அதிரடியாக அகற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தாராபுரம் அருகேயுள்ள அண்ணா சிலை முதல் பூக்கடை கார்னர் வரை சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.



இந்த நிலையில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு மற்றும் ஆய்வாளர் மணிகண்டன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பரமசிவம் முன்னிலையில் காவல்துறையினர் தாராபுரம் மக்களின் வேண்டுகோளை ஏற்று அதிரடி நடவடிக்கையாக அவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



அதன்படி, அண்ணா சிலையில் இருந்து பூக்கடை கார்னர் வரை பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்த கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினர்.



பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள தாராபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...