தாராபுரத்தில் சாலையை ஆக்கிரமித்து நின்ற வாகனங்களை அகற்றிய போலீசாருக்கு குவியும் பாராட்டு!

தாராபுரத்தில் அண்ணா சிலை முதல் பூக்கடை கார்னர் வரை சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக புகார் எழுந்ததால் அந்த வாகனங்களை அதிரடியாக அகற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட வாகனங்களை அதிரடியாக அகற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தாராபுரம் அருகேயுள்ள அண்ணா சிலை முதல் பூக்கடை கார்னர் வரை சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.



இந்த நிலையில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு மற்றும் ஆய்வாளர் மணிகண்டன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பரமசிவம் முன்னிலையில் காவல்துறையினர் தாராபுரம் மக்களின் வேண்டுகோளை ஏற்று அதிரடி நடவடிக்கையாக அவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



அதன்படி, அண்ணா சிலையில் இருந்து பூக்கடை கார்னர் வரை பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்த கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினர்.



பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள தாராபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...