உடுமலை அருகே கிடப்பில் போடப்பட்ட தரைமட்ட பாலம் கட்டும் பணி - வாகன ஓட்டிகள் அவதி!

உடுமலை அடுத்த கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் பணிகளால் தரைமட்ட பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாலும், அங்குள்ள பெரிய அளவிலான பள்ளத்தில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விழுந்து விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தரைமட்ட பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் அருகே கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் பணிகளால், அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. இதனால் பொள்ளாச்சி- பழனி சாலையில் இருந்து இணைப்பு சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் கழிவுநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தரைமட்ட பாலத்தை புதுப்பித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு பணி தொடர்ந்து நடைபெறாததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது, நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு செல்வதற்கு இந்த சாலை பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. இதில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்ததை யொட்டி புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன் பின்பு பணிகள் நடைபெறவில்லை.

இதன் காரணமாக ஆண்டாள் சீனிவாசன் லே அவுட், பெரியார் நகர், பழனியாண்டவர் நகர், ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு வேறு சாலை வழியாக சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து கால்வாய் ஓரத்தில் வசித்து வரும் பொதுமக்களுக்கு உடல் நலக்குறைபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.

பொள்ளாச்சி - பழனி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியவாறு பெரிய அளவில் குழி வெட்டப்பட்டு உள்ளதால் அந்தப் பகுதியை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எனவே கழுத்தறுத்தான் பள்ளம் அருகே கிடப்பில் போடப்பட்ட தரைமட்ட பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...