விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணி (65) என்பவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை சூலூர் சிவகாமி நகரைச் சேர்ந்த சந்திரசேகர் (48), கடந்த 2010-ஆம் ஆண்டு தனது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருடன் இணைந்து, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணி (65) என்பவரிடம் இருந்து பொள்ளாச்சி அருகே சோலனூரில் உள்ள 97 மனைகளை வாங்கியுள்ளார்.

பின்னர், அந்த மனைகள் பட்டியலினத்தைச் சேர்ந்த நிலமற்ற விவசாயிகளுக்கு அரசு வழங்கப்பட்ட விவசாய நிலங்கள் என்பதும், நில உரிமையாளர்களை ஏமாற்றி மணி அவற்றை விற்பனை செய்திருந்ததும் சந்திரசேகருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மணியிடம் கேட்டபோது, அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து நிலத்தை விரைவில் பத்திரப்பதிவு செய்து தருவதாகக் கூறியதுடன், போலி ஆவணங்கள் மூலம் பத்திரங்களையும் தயாரித்து வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பத்திரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து சந்திரசேகர் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பணியைத் தொடங்கியுள்ளார். அப்போது, கிராம நிர்வாக அலுவலர் கட்டுமானப் பணியை நிறுத்தி, இது விவசாய நிலம், வீடு கட்ட அனுமதி இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பின்பு தான் மணி அவரைஏமாற்றியது சந்திரசேகருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணங்கள் தயாரித்து பட்டியலினருக்கான விவசாய நிலத்தை விற்றதாக குற்றம்சாட்டப்பட்ட மணி என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய நபர்கள் உள்ளனரா என்பது குறித்தும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...