மேட்டுப்பாளையம் அருகே உணவகத்துக்குள் புகுந்து கணவன், மனைவி மீது தாக்குதல்! - பாஜக பிரமுகர்கள் மூவர் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தொழில்போட்டியில் உணவகத்தில் புகுந்து கணவன், மனைவி இருவர் மீது கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர்களான பிரபு, ஞானசேகர், விஜயகுமார் 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தொழில்போட்டி காரணமாக உணவகத்திற்குள் புகுந்து கணவன் மனைவி மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை - தோலம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (40). இவரது மனைவி கீதா (34). கணவன், மனைவி இருவரும் தோலம்பாளையம் சாலையில் உணவகம் நடத்தி வருகின்றனர். இந்த உணவகத்தில் விலை குறைவாகவும், தரமான பொருட்களை கொண்டு தயாரித்து உணவு வழங்கி வருகின்றனர்.

இவர்களது கடைக்கு அருகே வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பிரபு (34) என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த பிரபு தனது கடையில் வேலை பார்க்கும் காரமடையை சேர்ந்த ஞானசேகர் (54), விஜயகுமார் (52) ஆகியோருடன் சரவணகுமாரின் கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர்களிடம் நீங்கள் எப்படி, நான் விற்பனை விட குறைவாக விற்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களிடம் நீ எப்படி உணவகம் நடத்துகிறாய் என்று நான் பார்க்கிறேன் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த கணவன், மனைவி இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பினர். இதுகுறித்து சரவணகுமாரும், அவரது மனைவியும் காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தம்பதியை தாக்கிய பாஜக பிரமுகர்களான பிரபு, ஞானசேகர், விஜயகுமார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...