மேட்டுப்பாளையம் அருகே உணவகத்துக்குள் புகுந்து கணவன், மனைவி மீது தாக்குதல்! - பாஜக பிரமுகர்கள் மூவர் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தொழில்போட்டியில் உணவகத்தில் புகுந்து கணவன், மனைவி இருவர் மீது கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர்களான பிரபு, ஞானசேகர், விஜயகுமார் 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தொழில்போட்டி காரணமாக உணவகத்திற்குள் புகுந்து கணவன் மனைவி மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை - தோலம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (40). இவரது மனைவி கீதா (34). கணவன், மனைவி இருவரும் தோலம்பாளையம் சாலையில் உணவகம் நடத்தி வருகின்றனர். இந்த உணவகத்தில் விலை குறைவாகவும், தரமான பொருட்களை கொண்டு தயாரித்து உணவு வழங்கி வருகின்றனர்.

இவர்களது கடைக்கு அருகே வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பிரபு (34) என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த பிரபு தனது கடையில் வேலை பார்க்கும் காரமடையை சேர்ந்த ஞானசேகர் (54), விஜயகுமார் (52) ஆகியோருடன் சரவணகுமாரின் கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர்களிடம் நீங்கள் எப்படி, நான் விற்பனை விட குறைவாக விற்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களிடம் நீ எப்படி உணவகம் நடத்துகிறாய் என்று நான் பார்க்கிறேன் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த கணவன், மனைவி இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பினர். இதுகுறித்து சரவணகுமாரும், அவரது மனைவியும் காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தம்பதியை தாக்கிய பாஜக பிரமுகர்களான பிரபு, ஞானசேகர், விஜயகுமார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...