உலக அமைதி, வன்முறை எதிர்ப்பை வலியுறுத்தி ஜிட்டோ பெண்கள் அமைப்பினர் அஹிம்சா மாரத்தான்

உலக அமைதி, வன்முறை எதிர்ப்பை வலியுறுத்தி கோவையில் ஜிட்டோ பெண்கள் அமைப்பு சார்பில் 3 பிரிவுகளில் நடைபெற்ற அஹிம்சா மாரத்தான் போட்டியில் ராணுவம், காவல்துறை, ஆண்கள், பெண்கள் என ஜாதி, மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.


கோவை: உலக அமைதி, வன்முறை எதிர்ப்பை வலியுறுத்தி கோவையில் ஜிட்டோ பெண்கள் அமைப்பு சார்பில் அஹிம்சா மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.

உலகம் முழுவதும் 22 நாடுகளிலும், இந்தியாவில் 65க்கும் மேற்பட்ட நகரங்களிலும் கின்னஸ் உலக சாதனை நிகழ்வாக அஹிம்சா மராத்தான் நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகவும், அமைதியை வலியுறுத்தியும் அஹிம்சா மாரத்தான் நடைபெற்றது.



முழுவதும் பெண்கள் ஒருங்கிணைத்த இந்த மாரத்தானை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மூன்று, ஐந்து, பத்து கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், இந்திய தரைப்படை, கப்பல் படை, விமானப் படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த ராணுவத்தினர், காவல் துறையினர் உட்பட வயது வித்தியாசம், ஜாதி, மதம் ஆண் பெண் என்று எந்தவித வித்தியாசமும் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

கோவையில் நடைபெற்ற ஜிட்டோ அகிம்சா மாரத்தான் போட்டியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...