உடுமலை அரசுப்பள்ளியில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் - பாழாகும் அவலம்!

உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகிய நிலையில், 6 மாதமாக சீரமைக்கப்படாமல் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைக்கப்படாமல் பாழாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் நவீன சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்கென சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 மூலம் ரூ.5 லட்சம் செலவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது.

இந்த இயந்திரம் நிறுவப்பட்டு ஒரு சில மாதங்கள் கூட செயல்படாத நிலையில் திடீரென பழுதடைந்தது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த இயந்திரமானது, செயல்படாத நிலையில் சுத்திகரிப்பு இயந்திரம் வீணாகி வருகிறது.

இதனால், மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...