உடுமலை அரசுப்பள்ளியில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் - பாழாகும் அவலம்!

உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகிய நிலையில், 6 மாதமாக சீரமைக்கப்படாமல் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைக்கப்படாமல் பாழாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் நவீன சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்கென சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 மூலம் ரூ.5 லட்சம் செலவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது.

இந்த இயந்திரம் நிறுவப்பட்டு ஒரு சில மாதங்கள் கூட செயல்படாத நிலையில் திடீரென பழுதடைந்தது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த இயந்திரமானது, செயல்படாத நிலையில் சுத்திகரிப்பு இயந்திரம் வீணாகி வருகிறது.

இதனால், மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...