தாராபுரத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள மாநில தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் திருப்பூர் மாவட்ட சங்கம் சார்பில் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதற்கு மாவட்ட தலைவர் இளங்கோ ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஷா, மாவட்ட பொருளாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பணி வரன்முறை மற்றும் பதவி உயர்வினை தாமதம் இன்றி வழங்க வேண்டும். விற்பனையாளருக்கு ஊதிய உயர்வு மற்றும் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்.



அண்டை மாநிலமான கேரளாவில் தொடக்க கடன் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குவதைபோல தமிழ்நாட்டிலும் இதனை தமிழ்நாடுஅரசு நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.



இதில், மாவட்டம், தாலுகா அளவிலான கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...