கோவை பூச்சியூர் பண்ணாரியம்மன் கோவில் பூக்குண்ட உற்சவ விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூர் பகுதியில் உள்ள சஞ்சீவி பண்ணாரி மாரியம்மன் கோவிலின் 50ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலின் 50ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கோவை நரசிம்ம நாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூர் இராவுத்தக்கொல்லனூரில் சஞ்சீவி பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 50ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பூக்குண்ட உற்சவத்தின் முதல் நிகழ்வாக கடந்த 27ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்வுடன் தொடங்கி நேற்று சஞ்சீவி வனத்தீர்த்தம் கொண்டுவருதல், சக்தி அழைத்தல், குண்டம் திறப்பது, அக்னி குண்டத்தில் அக்னி ஏற்படுத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.



தொடர்ந்து இன்று காலை சக்தி கரம் அழைத்தலை தொடர்ந்து பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூக்குண்டம் இறங்கினர். தொடர்ந்து பூவோடு எடுத்தல், அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.



இந்த திருவிழாவில், சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...