தாராபுரம் அருகே மாணவியிடன் செயின் பறிப்பு - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

தாராபுரம் அருகே தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த சிவகுமார் மகள் கீர்த்தனா, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தாராபுரத்திற்கு பேருந்தில் பயணித்த போது, முக கவசம் அணிந்த பெண்கள் செயினை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் நூதன முறையில் பெண்கள் செயினை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அருகேயுள்ள தளவாய்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் கீர்த்தனா. கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவ தினத்தன்று தளவாய் பட்டணத்திலிருந்து தாராபுரம் செல்ல தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்தார்.



பேருந்தில் பயணிகள் அதிகம் இருந்ததால், மாணவி கீர்த்தனாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை நோட்டமிட்ட முக கவசம் அணிந்திருந்த இரண்டு பெண்கள் நைசாக கூட்டத்தில் நெரிசலை பயன்படுத்தி கழுத்திலிருந்த தங்கச் செயினை பறித்துள்ளனர்.

இந்நிலையில் தாராபுரம் பேருந்து நிலையம் வந்து இறங்கிய மாணவி கீர்த்தனா தனது கழுத்திலிருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள இரண்டு சவரன் தங்கச் சங்கிலி காணவில்லை என்று பதறி அடித்து பேருந்து நடத்துநரிடம் சென்று தகவலை கூறினார்.



உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேருந்திலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது கருப்பு மற்றும் வெள்ளை நிற சால்களை அணிந்த இரண்டு பெண்களில் கருப்பு நிற முககவசம் அணிந்த பெண் மாணவி கீர்த்தனாவின் கழுத்திலிருந்த தங்கச் செயினை திருடுவது, பதிவாகி இருந்தது.

சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்துப் பெண்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...