தாராபுரம் உழவர் சந்தையில் தரமற்ற தக்காளி விற்பனை - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தாராபுரம் உழவர் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கிலோ ரூ.9க்கு விற்பனை செய்யப்படும் தக்காளியை விவசாயிகள், சில்லறையாகக் கொடுக்காமல் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதால், தரமற்ற தக்காளிகளை விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் உழவர் சந்தையில் தரமற்ற தக்காளி விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குச் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தக்காளிகளை பெட்டியில் அடுக்கி வைத்து விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.



அதன்படி உழவர் சந்தையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ஒன்பது ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகள் தக்காளியை சில்லறையாக விற்பனை செய்யாமல், 15 கிலோ எடைக் கொண்ட பெட்டிகளை வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால் தரமற்ற தக்காளியை மட்டுமே விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தரமான தக்காளியை வாங்க உழவர் சந்தைக்கு வந்தால், அங்கும் தரமற்ற தக்காளிகளே விற்பனை செய்வதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மொத்தமாக காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்து, சில்லறையில் வாங்கும் பொது மக்களுக்கு அனைத்து காய்கறிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...