கோவை- பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்தால் ஈச்சனாரி கோவில் பாதிக்கப்படாது என பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளுக்காக மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ஓதுக்கி இருப்பதாகவும் , இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து பேச இருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

பொள்ளாச்சி இடையேயான 4 வழிச்சாலை  அமைக்கப்பட்டு வரும் பகுதிகளை  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியால் பாதிக்கப்படாது எனவும்  சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் மேம்பாலம் அமைக்கப்பட்டு கோவிலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் நெடுஞ்சாலை அமைக்கும் போதே சாலையின் இரு பகுதிகளிலும் செடிகள் அமைப்பது, மரங்கள் நடுவது போன்ற  சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் , பொள்ளாச்சி  கோவை மக்கள் நகரங்களை காப்பதில் ஆர்வத்துடன் இருப்பதால்  4 வழிச்சாலை பிரமாதமாக அமையும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தின் சாலை மேம்பாடு மற்றும் விரிவாக்க பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு ஓதுக்கி இருப்பதாகவும் குறிப்பாக  கிழக்கு கடற்கரை சாலைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளதாகவும் , தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து கிழக்கு கடற்கரை சாலை விர்வாக்க பணிகள் தொடர்பாக பேச இருப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படும் போது மிக முக்கியமாக பொருளாதார சாலையாக உருவெடுக்கும் எனவும், புறந்தள்ளப்பட்ட  கிழக்கு மாவட்ட மக்கள்  வசிக்கும் பகுதிகளில் இதன் மூலம் புதிய தொழில்கள் உருவாகி அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி கொடுக்கும்  எனவும் பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தற்போதைய முதல்வர் சாலை போக்குவரத்து துறையில் இருந்ததால் இந்த சாலை அமைவதன் பலன்கள் தெரியும் எனவும், இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஓத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு புறந்தள்ளுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...