‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ கண்காட்சியை நேரில் கண்டு ரசித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!

கோவை வ.உ.சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியினை நேரில் பார்வையிட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், முதல்வரை சிலையாக வைக்கப்பட்டது தனக்கு பிடித்திருந்ததாக தெரிவித்தார்.



கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் பார்வையிட்டார்.



கோவை வ.உ.சி பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பான, “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பார்வையிட்டார்.



இதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,



“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்று இங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படமும் நன்றாக உள்ளது. கட்சியில் கடைசி தொண்டனாக இருந்து ஆரம்பித்து தலைமைக்கு வந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் இந்த கண்காட்சி முதலில் நடைபெற்றது. தற்போது, செந்தில் பாலாஜி மூலம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது. நான் இங்கு வந்து அந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளேன் முதல்வர் அவர் கடந்து வந்த பாதை புகைப்படம் கண்காட்சியை கண்டிப்பாக அனைவரும் பாருங்கள்.

இதனையடுத்து அவரிடம் உங்களுக்கு பிடித்த புகைப்படம் என கேட்கப்பட்ட கேள்விக்கு, முதல்வரை சிலையாக வைக்கப்பட்டது எனக்கு பிடித்தது என பதிலளித்தார்.

முதல்வர் தனது இளம் வயதில் கிரிக்கெட் ஆடுவது 23 வயது 25 வயது பயண புகைப்படம் என்னுடைய தலைமுறைக்கு அது தெரியாது. முதல்வரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு நல்ல ஒரு கண்காட்சி அனைவரும் வந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...