கோவை நஞ்சுண்டாபுரம் அருகே தரைப்பால தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து - ஒருவர் பலி!

நஞ்சுண்டாபுரம் பகுதியிலுள்ள தரைப்பாலத்தில் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், பின்னால் இருந்த தொழிலாளி, பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தரைப்பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (49). கூலி தொழிலாளியான இவர், இன்று காலை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த வினோத் (32), என்பவருடன் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் இருவரும் போதையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை வினோத் ஓட்டிச்சென்ற நிலையில், குமார் பின்னால் அமர்ந்துள்ளார். இருவரும் நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள தரைப்பாலம் அருகே வந்த போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.



இதில், குமார் தூக்கிவீசப்பட்டு தரைப்பாலத்தில் இருந்து சுமார் 30 அடி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது தலையில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற வினோத் காயமடைந்தார்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து, அங்கிருந்தவர்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் சந்தேகம் உள்ளதாக குமார் உறவினர்கள் கூறியதால் வினோத்திடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...