கோவை நஞ்சுண்டாபுரம் அருகே தரைப்பால தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து - ஒருவர் பலி!

நஞ்சுண்டாபுரம் பகுதியிலுள்ள தரைப்பாலத்தில் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், பின்னால் இருந்த தொழிலாளி, பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தரைப்பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (49). கூலி தொழிலாளியான இவர், இன்று காலை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த வினோத் (32), என்பவருடன் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் இருவரும் போதையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை வினோத் ஓட்டிச்சென்ற நிலையில், குமார் பின்னால் அமர்ந்துள்ளார். இருவரும் நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள தரைப்பாலம் அருகே வந்த போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.



இதில், குமார் தூக்கிவீசப்பட்டு தரைப்பாலத்தில் இருந்து சுமார் 30 அடி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது தலையில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற வினோத் காயமடைந்தார்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து, அங்கிருந்தவர்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் சந்தேகம் உள்ளதாக குமார் உறவினர்கள் கூறியதால் வினோத்திடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...