உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் நன்கொடை வழங்கும் இடத்தில் முறைகேடு!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் நன்கொடை வழங்கும் இடத்தில் நன்கொடை வழங்குவதற்கு முன்பே ரசீது எடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.200 க்கான நன்கொடைக்கு ரூ.100 மதிப்பிலான ரசீது வழங்கப்படுவதாக பக்தர்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் நன்கொடை வழங்கும் இடத்தில் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுன் துவங்கியது. தினமும் கோவில் வளாகத்தில் உள்ள கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

மேலும் பூவோடு வழிபாடும் நேற்று முன்தினம் துவங்கிய நிலையில் தினமும் ஏராளமானோர் பூவோடு எடுத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஓலிப்பெருக்கி மூலம் கோவில் பகுதியில் நன்கொடை வழங்குபவர்கள் வழங்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே நன்கொடை வழங்கும் இடத்தில் தற்சமயம் பெரும் முறைகேடு நடந்து வருவதாக பக்தர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர். அதாவது ரூ.200 ரூபாய் நன்கொடை வழங்கினால் ரூ.100 ரூபாய்க்கான ரசிது வழங்கி வருகிறார்கள்.

அதாவது, பக்தர்கள் நன்கொடை வழங்கும் நேரத்தில் தான் ரசீது எடுத்து தர வேண்டும் ஆனால் இந்துசமய அறநிலைய ஊழியர்கள் ஏற்கனவே எடுத்து வைத்த ரசீதுகளை கொடுத்து வருகிறார்கள்.



இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் கேட்டால் கூட்ட நெரிசலில் அப்பொழுது எடுக்க முடியாத காரணத்தால் ஏற்கனவே எடுத்து வைத்துள்ளோம் என அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர். இது குறித்து புகார் தெரிவிக்க செயல் அலுவலகம் சென்றால் அலுவலகத்தில் யாரும் இருப்பது இல்லை.

ஆகையால் நன்கொடை வழங்கும் இடத்தில் பெரும் முறைகேடு நடந்து வருவதால் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி உடுமலை மாரியம்மன் கோவில் கல ஆய்வு செய்து தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதனிடையே தேர்த்திருவிழா சமயத்தில் கூட செயல் அலுவலர், அலுவலகத்தில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...