உடுமலை அருகே வண்டல் மண் கொள்ளை - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட விவல்ல கொண்டாபுரத்தில் குளங்களில் அனுமதியின்றி வண்டல் மண் எடுப்பதாகவும், தடுக்க சென்ற அதிகாரிகளையும் வண்டல் மண் எடுப்பவர்கள் மிரட்டுவதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே அனுமதியின்றி வண்டல் மண் எடுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விவல்ல கொண்டாபுரம் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.



இந்த நிலையில், விவசாயிகள் போர்வையில் திமுக பிரமுகர்கள் மற்றும் ஜேசிபி டிராக்டர் உரிமையாளர்கள் முறைகேடாக ஆணை பெற்று கடந்த சில தினங்களாக வண்டல் மண் எடுத்து ஒரு இடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் விவசாயிகள் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்தில் வட்டாட்சியர் கண்ணாமணி ஆய்வு செய்து முறைகேடாக வண்டல் மண் எடுத்தவர்களை எச்சரித்தார்.



மேலும் தொடர்ந்து வண்டல் மண் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில், இன்று வண்டல் மண் அள்ளக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தாலும், காலையிலிருந்து வண்டல் முறைகேடாக டிராக்டர் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் தரப்பில் கோட்டாட்சியர் ஜஸ்வந்கண்ணணுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோட்டாட்சியர் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வண்டல் மண் எடுப்பது நிறுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.

ஆனால் வண்டல் மண் எடுப்பவர்கள் அமைச்சர், மாவட்டச் செயலாளரிடம் சொல்லி விட்டு எடுக்கிறோம், எங்களுக்கு அனுமதி வழங்கி விட்டார்கள் என வருவாய்த்துறையினரை மிரட்டும் தொணியில் பேசிவிட்டு தொடர்ந்து மண் எடுத்து வருகின்றனர்.

ஆகையால் மாவட்ட ஆட்சியர் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனே வண்டல் மண் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தவறும் பட்சத்தில் விவசாயிகள் ஒன்று திரட்டி நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...