உடுமலை - மூணாறு சாலையில் மிரட்டும் ஒற்றை யானையால் பரபரப்பு

உடுமலை - மூணாறு சாலையில் உள்ள புங்கன் ஓடை பாலம் அருகே ஒற்றை ஆண் யானை, வாகனங்களை மறித்து தாக்குவதால், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை - மூணாறு சாலையில் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து, கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு, மறையூர் பகுதிகளுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

பருவ மழை குறைந்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால், அமராவதி அணையை நோக்கி, யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் படையெடுத்த வண்ணம் உள்ளது.



இந்நிலையில், ஏழுமலையான் கோவில் முதல் புங்கன் ஓடை பாலம் வரையிலான பகுதியில், ஒரு ஆண் யானை மட்டும் முகாமிட்டுள்ளது.

இவ்வழியே வரும் பேருந்து, லாரி, சுற்றுலா வாகனங்களை மறித்தும், கண்ணாடிகளை உடைத்தும், அச்சுறுத்தி வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், புங்கன் ஓடை பாலம் அருகே ஒற்றை யானை வாகனங்களை வழி மறித்து தாக்குகின்றன. யானை கூட்டத்திலிருந்து விலகி வந்து, மிகவும் கோபமான மன நிலையில் சாலை பகுதியில் முகாமிட்டுள்ளது.

எனவே, இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...