எங்கள் சமூகம் மீது அவதூறு பரப்புகிறார்..! - நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா மீது பண்டார குல நல சங்கம் புகார்!

முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா பண்டார குல சமுதாயத்தினர் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பண்டார குல நல சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பண்டார குல நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பண்டார சமுதாயத்தை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆ.ராசாவின் இந்த பேச்சு, யூடியூப் தளத்தில் வெளியாகி, எங்களது சமுதாய மக்கள் பிற சமுதாய மக்களிடம் மிகவும் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தில் எடுத்துள்ள உறுதி மொழியின் படி இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார்.



எனவே நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அதேபோல் யூ டியூபில் தங்கள் சமுதாயம் பற்றி பதிவிடப்பட்ட வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...