தாராபுரம் மகா மாரியம்மன் கோவில் திருவிழா - நேர்த்தி கடன் செலுத்திய அமைச்சர் கயல்விழி

தாராபுரத்தில் 150 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் கோயிலில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற தீர்த்த குட ஊர்வலத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு தீர்த்த குடம் எடுத்து பக்தர்களுடன் ஊர்வலமாக வந்தார்.



திருப்பூர்: தாராபுரம் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீர்த்த குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 150 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் திருக்கோயில் கோவிலின் பங்குனி மாத தீர்த்த திருக்குட திருவிழா ஊர் நாட்டாமை தலைமையில் திமுக நகராட்சி வார்டு உறுப்பினர் புனிதா சக்திவேல் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பக்தர்களுடன், தானும் தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.



மலர்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்த மகா மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகரத் துணைச் செயலாளர் பிலோமினா, வார்டு பொறுப்பாளர் மணிமாறன், சுப்பையன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...