மோடியின் ஈஷா வருகையை எதிர்த்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பைச் சேர்தோர் கோவையில் கைது

நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தை கண்டும்காணாமல் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், வன ஆக்கிரமிப்பு அமைப்பான ஈஷாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமரை கண்டித்தும் கோவையில் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



பவானி ஆறு தடுப்பணை தடுப்பு போராட்டக் குழுவின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்மாநில காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட 11  அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மோடியை கண்டித்தும், மத்திய அரசின் தமிழக விரோத செயல்களைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



தொடர்ந்து திடீரென ஆர்பாட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதின் மூலம் மத்திய அரசு தமிழகத்திடம் பாராமுகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், பிரதமர் கலந்து கொள்ளும் ஈஷா விழாவிற்காக வன விலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டிருப்பதின் மூலம் அங்கு விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பது உறுதியாவதாகவும் தெரிவித்தார். 

இத்தகைய சட்ட அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஈஷாவின் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வதை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுவதாகவும் கு.ராமகிருட்டிணன் அப்போது தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...