ஈஷாவிற்கு மோடி வருகையை எதிர்த்து கருப்பு பலூன் பறக்கவுடும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் அமைப்பினர்



கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்து, வானில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஈஷா யோகா மைய சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது யானை முகங்களுடனும், கருப்பு பலூன்களுடனும் முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதிக்கட்சியினர், வானில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து போராட்டக்காரர்கள் கைகளில் இருந்த பலூன்களை காவல் துறையினர் உடைத்தனர். 



இப்போராட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறும்போது, ஈஷா யோகா மையத்தினர் காடுகளை அழித்தும், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்தும், அனுமதியின்றி சட்ட விரோதமாக கட்டப்பட்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பது கண்டிக்கத்தகக்து எனவும், இது ஈஷாவின் குற்றச்செயல்களை பாதுகாக்கும் நடவடிக்கை எனவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...