கோவை குறிச்சியில் போதை மாத்திரை விற்பனை - இளைஞர் கைது

கோவை குறிச்சி அடுத்த வெங்கடாசலபதி நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், அபூபக்கர் சித்திக் (29) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் குறிச்சி அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 40 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

கோவை குறிச்சி வெங்கடாச்சலபதி நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போத்தனூர் காவல் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையில் சென்ற போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அபூபக்கர் சித்திக் (29) என்பவர் போதை மாத்திரைகளுடன் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் இவர் அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அபுபக்கர் சித்திக்கை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...