திருப்பூரில் ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் கடும் விலை உயர்வு, தவறான ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளால் பனியன் தொழில் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இந்த சூழலில் பனியன் தொழிலை நம்பி இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக வாகன ஓட்டுனர்களை வெகுவாக பாதிக்கும் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட ஏ ஐ டி யு சி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், ஆவணங்கள் சரியாக இருந்தாலும் வலுக்கட்டாயமாக வழக்கு போடுவோம் என போலீசார் மிரட்டுகின்றனர். அதுமட்டுமின்றி ஓட்டுநர்களை ஒருமையில் கேவலமாக பேசுகின்றனர்.



திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு தாராபுரம் ரோடு பல்லடம் ரோடு அவிநாசி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நாள்தோறும் பலமுறை ஆவணங்களை சரி பார்ப்பதாக கூறி வாகனங்களை காத்திருக்க வைக்கின்றனர் என குற்றம்சாட்டினர்.



இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசாரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...