திருப்பூரில் ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் கடும் விலை உயர்வு, தவறான ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளால் பனியன் தொழில் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இந்த சூழலில் பனியன் தொழிலை நம்பி இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக வாகன ஓட்டுனர்களை வெகுவாக பாதிக்கும் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட ஏ ஐ டி யு சி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், ஆவணங்கள் சரியாக இருந்தாலும் வலுக்கட்டாயமாக வழக்கு போடுவோம் என போலீசார் மிரட்டுகின்றனர். அதுமட்டுமின்றி ஓட்டுநர்களை ஒருமையில் கேவலமாக பேசுகின்றனர்.



திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு தாராபுரம் ரோடு பல்லடம் ரோடு அவிநாசி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நாள்தோறும் பலமுறை ஆவணங்களை சரி பார்ப்பதாக கூறி வாகனங்களை காத்திருக்க வைக்கின்றனர் என குற்றம்சாட்டினர்.



இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசாரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...