வால்பாறை அருகே வனத்துறை பயிற்சி மையத்தில் கலந்தாய்வு கூட்டம்

வால்பாறை அட்டக்கட்டி பயிற்சி மையத்தில் வனத்துறை, மின்சார துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வனவிலங்குகள் உயிரிழப்பை தடுப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



கோவை: வால்பாறையில் வனவிலங்கு உயிரிழப்பை தடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம் பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய நான்கு வனச் சரகத்திற்கு உட்பட்ட வனத்துறையினர், மின்சார துறையினர், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் இணைந்து அட்டகட்டி பயிற்சி மையத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.



இக்கூட்டத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் மற்றும் வனவிலங்குகள் உயிரிழப்பதை எவ்வாறு தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.



இதில் மின் வாரியத்திற்கு தகவல் அளிக்காமல் விவசாய நிலங்களுக்கு மின் வேலி அமைப்பதை தடுக்கவும், மின் வேலியினால் வனவிலங்குகள் இறந்தால் 1972 வன சட்டப்படி 3 முதல் 7 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...