அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு ஐபிஎல் போட்டிகளை காண பாஸ் கேட்ட எஸ்.பி.வேலுமணி - சுவாரஸ்ய பதிலளித்த உதயநிதி!

சட்டப்பேரவையில் பேசிய அதிமுக கொரடா எஸ்.பி.வேலுமணி, சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, ஐபிஎல் தலைவராக உள்ள ஜெய்ஷாவிடம் பேசி எங்களுக்கும் வாங்கி கொடுங்கள் என்றார்.



சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பிரத்யேக பாஸ் வழங்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் வரை கொடுக்கப்பட்டது. தற்போது அதிமுக எம்.எல்.ஏ. -க்களுக்கு மட்டும் கொடுப்பதில்லை. எங்களுக்கும் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.



இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி கோரிக்கைக்கு சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐபிஎல் போட்டியை நடத்துபவர் உங்கள் நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தான்.

அவரிடம் பேசி ஒரு எம்எல்ஏக்கு 5 டிக்கெட் வாங்கி குடுங்க, காசு கொடுத்து வாங்கி கொள்ள நாங்கள் தயார், என்று கலகலப்பாக பதிலளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...