கோவை அருகே தண்ணீர் தொட்டியில் யானை குட்டி சடலம் மீட்பு

கோடைக் காலம் துவங்கியதால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலையில் கோவை பாலமலை பகுதியில் உள்ள தனியார் தோட்ட கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் யானை குட்டி இறந்த நிலையில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: பாலமலை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் யானை குட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை பகுதியில், அபராஜிதா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது.

இதையடுத்து தோட்டத்திலிருந்த பணியாளர்கள் பார்த்த போது, அதில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக வனத்துறை ஊழியர்கள் இறந்த யானை குட்டியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 அடி ஆழம் உள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் யானைகள் கூட்டமாக வந்த போது, அதில் சிறிய குட்டி தவறி விழுந்திருக்கலாம் எனவும், குட்டி விழுந்து சுமார் 3 நாட்களாக இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானை குட்டியின் உடலை மீட்டவுடன், நாளை மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...