மின்கட்டண உயர்வைக் கண்டித்து ஏப்.20ல் கதவடைப்பு ஆர்ப்பாட்டம் - டான்சியா அறிவிப்பு

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20-ம் தேதி கதவடைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு குறு,சிறு தொழில்கள் சங்கம் அறிவித்துள்ளது.


Coimbatore: தமிழ்நாடு குறு,சிறு தொழில்கள் சங்கமான டான்சியாவின் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதில், மின்வெட்டால் தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு மின்கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும். உச்ச நேரம் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் தொழில்நிறுவனங்களை அடைத்தும், மாவட்ட தலைநகரங்களில் தொழில்முனைவோர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்கட்டண உயர்வு மிக பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அரசு மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும் என தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கத்தின் ( ‘டான்சியா’) துணை தலைவர் சுருளிவேல் தெரிவித்தார்.



சென்னை இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் நிறுவன தலைவர் ரகுநாதன் கூறியதாவது:

மின்கட்டண உயர்வு பிரச்சினைக்கு தொடக்கத்திலேயே தீர்வு கண்டிருக்க வேண்டும். தொழில்முனைவோர் எப்போதும் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள். முதலில் கோரிக்கை மனு அளிப்பார்கள். காத்திருப்பார்கள். நடவடிக்கை எடுக்காவிட்டால் கடைசியில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.மத்திய அரசு மற்றும் மாநில அரசு தொழில்முனைவோர் பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும், கோரிக்கைகளை கேட்கவும் மறுக்கின்றனர்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம் கடைசி முயற்சியாகத்தான் பார்க்க வேண்டும். இப்போராட்டம் முன்பே செய்திருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஜிஎஸ்டி கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக கடந்த 8 மாதங்களாக பல்வேறு தொழில் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்டசபையில் மின்கட்டண உயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக எம்எல்ஏ வேலுமணி பேசிய போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் குறு, சிறு தொழில்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார். கள நிலவரம் தெரியாமல் பேசினாரா அல்லது கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டாரா என்பது தெரியவில்லை.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...