கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுத் தீ!

கோவை ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத் தீ பற்றியெரிந்து கொண்டுள்ளது. தீயை அணைக்கும் பணிக்காக நீலகிரி மற்றும் சிறுமுகை வனச்சரகத்தில் இருந்து கூடுதல் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ எரிந்து வருகிறது.

சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பற்றி எரிந்துவரும் நிலையில், 40 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள் 4 குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மூங்கில் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தீ அணைக்கப்பட்டது.



தற்போதுவரை, சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவில் தீ அணைக்கப்பட்ட நிலையில், சிறுமுகை மற்றும் நீலகிரி வனச்சரகத்தில் இருந்து கூடுதலாக வனத்துறை ஊழியர்கள் குழு தீயை அணைக்கும் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

காற்றின் திசைக்கு ஏற்ப தீயை அணைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், இன்று மாலைக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...