சூலூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை எதிர்த்து பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு!

சூலூர் அடுத்த மேலகாளிபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர்கள் இருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி தாசில்தார் அலுவலகத்தில், அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பொது பாதையை தனிநபர் இருவர் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூலூர் அடுத்த மேலகாளிபாளையம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு வீரங்காடு பகுதியை சுற்றிலும் சொந்தமாக தோட்டம் உள்ளது. அப்பகுதியில் மாரியப்பன் உள்பட 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே அப்பகுதியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர்கள் இருவர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாரியப்பன் உள்ளிட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனை கண்டித்து, சூலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்தை நாடுவோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...