திருப்பூர் அருகே நொய்யல் ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சோகம்!

திருப்பூர் சிட்கோ பகுதியை சேர்ந்த 7 சிறுவர்கள் விடுமுறை காரணமாக நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற போது, சந்துரு(12) மற்றும் இனியன்(10) என்ற 2 சிறுவர்கள் ஆழத்திற்கு சென்று குளித்த போது சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அருகே நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக திருப்பூர் சிட்கோ அருகேயுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.



இதில் சிட்கோ அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த சந்துரு(12) மற்றும் எம். எஸ். நகரை சேர்ந்த இனியன் (10) உள்பட 7 மாணவர்கள் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

தண்ணீர் குறைவாக இருந்ததால், மாணவர்கள் சந்துரு மற்றும் இனியன் ஆழமான இடத்திற்கு சென்று குளித்துள்ளனர். அப்போது இருவரும் சேற்றில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

நீச்சல் தெரியாத காரணத்தால் இருவரும் சேற்றில் இருந்து வெளியே வரமுடியாமல், நீரில் மூழ்கியுள்ளனர். அப்போது, மற்ற மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் 5 மாணவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.



பின்னர் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கியது தொடர்பாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி போலீசார் உயிரிழந்த 2 பள்ளி மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...