பல்லடம் அருகே தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு தடை!

பல்லடம் அருகே தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் திருவிழா, கடந்த 32 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள நிலையில், இந்தாண்டு திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருவிழாவிற்கு தடை விதிப்பதை கண்டித்து பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, அப்பகுதி மக்கள், அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளிபாளையம் பகுதியில் கடந்த 32 ஆண்டுகளாக தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் 60 அடி குண்டம், பொங்கல் சாட்டு விழா கொண்டாடப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தாண்டு ஊர்மக்கள் விழா எடுத்து வரும் நிலையில் தனி நபர்களின் புகார் அடிப்படையில் விழாவிற்கு இந்துசமய அறநிலைத்துறை தற்காலிக தடை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.



இதனை கண்டிக்கும் விதமாக கொங்காலி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் ராமசாமி மற்றும் காமநாயக்கன் பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, பஞ்சாயத்து தலைவர் சாந்தினி சம்பத்குமார் உள்ளிட்ட நான்கு தரப்பினர் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...