உடுமலை அருகே மூதாட்டியிடம் வழிப்பறி - இளைஞர்கள் 2 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையில் நடந்து சென்ற பாண்டியம்மாள் எனும் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்து திருடிவிட்டு தப்பிய சூரியஜெகதீஸ், கார்த்தி என 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை கணக்கம் பாளையத்தை சேர்ந்தவர் பாண்டியம்மாள்(வயது65). இவர் கடந்த 10ம் தேதி, மாலை 6 மணிக்கு பொன்னேரியில் இருந்து அய்யம்பாளையம்புதுார் கிராமத்துக்கு செல்லும் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, அவ் வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், பாண்டியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுத்து கொண்டு தப்பியோடினர். இது குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில், மூதாட்டியிடம் இருந்து செயினை பறித்து சென்றது, கோட்டூர் தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த சூரியஜெகதீஸ்(வயது26) பொங்காளியூர் கார்த்தி(வயது26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் குடிமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

இந்த இரு நபர்கள் மீதும், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த சில வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்ததையடுத்து, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...