எம்.பி.பி.எஸ் சீட்டு வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி!

மருத்துவ படிப்பிற்கான சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிர்தோஸ் சலாவுதீன் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட விமலா என்ற பெண், கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: எம்.பி.பி.எஸ் சீட்டு பெற்று தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் ஒருவர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்கள் தன செல்வன் - விமலா தம்பதி. தனச்செல்வன் சென்னை மத்திய தூல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், இவர்களது மகனுக்கு சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் எம்.பி.பி.எஸ், சீட் வாங்கி தருவதாக கூறி கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்.எல்.ஆர். டூட்டி பெய்டு ஷாப் நடத்தி வந்த பிர்தோஸ் சலாவுதீன் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 23 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ளார். ஆனால் மருத்துவ படிப்பு சீட்டு வாங்கித் தராமல் வெகு நாட்களாக அலைக்கழித்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையம், ஐஜி அலுவலகம், ஆணையாளர் அலுவலகம், முதலமைச்சர் தனி பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காநல்லூர் காவல் நிலையம் என அனைத்திலும் தொடர்ந்து மூன்று வருடங்களாக புகார் அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனவேதனை அடைந்த விமலா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.



அப்போது, அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அவர் மீது நீரை ஊற்றி காப்பாற்றினர்.

இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட பெண்ணை காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...