தர்பூசணி விளைச்சல் பாதிப்பு - உடுமலை விவசாயிகள் கவலை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக வெயில் காரணமாக இந்த சீசனில் தர்பூசணி விளைச்சல் குறைந்துள்ளது. கொள்முதல் விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில், கோடை சீசனை இலக்காக வைத்து கிணற்று பாசனத்தில், தர்பூசணி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

குறிப்பாக, மேட்டுப்பாத்தியில், நீர் ஆவியாவதை தடுக்க நிலப்போர்வை அமைத்து, விதைகளை நடவு செய்கின்றனர்.



செடிகளின் அருகிலேயே தண்ணீர் கிடைக்கும் வகையில், நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுகின்றனர். இதனால், ஏக்கருக்கு 20 டன் வரை தர்பூசணி விளைச்சல் கிடைத்துவருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், கொள்முதல் செய்ய ஆளில்லாமல், தர்பூசணி விளைநிலங்களிலேயே வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு சீசனில் தாந்தோணி, துங்காவி மற்றும் உடுமலை வட்டாரத்தில், சில பகுதிகளிலும் தர்பூசணி சாகுபடி செய்து அறுவடை தொடங்கியுள்ளது.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தற்போது, தர்பூசணியை கிலோ, 12 – 14 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது. அதிக வெயில் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு 2 டன் வரை விளைச்சல் குறைந்துவிட்டது. சாகுபடி செலவு அதிகரித்து நிலையில், விலை அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தை தவிர்க்க முடியும், என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...