சிறைவாசிகள் 27 பேருக்கு தொழிற்பயிற்சி நிறைவு சான்றிதழ்

சிறைவாசிகளுக்காக கோவை மத்திய சிறையில் கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், தொழில் பயிற்சி முடித்த 27 சிறைவாசிகளுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் ஜி.சண்முகசுந்தரம் மற்றும் சிறைக்கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.


கோவை: தமிழக சிறை துறை இயக்குநர் அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சிறையில் இருந்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகள், விடுதலைக்குப் பிறகு மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடா வண்ணம் தொழில் தொடங்க அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.



அதில் கோவை மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சுயதொழில் பயிற்சி நிலையம் மூலம், மத்திய சிறைவாசிகளுக்கு ஏசி, ரெப்ரிஜிரேட்டர், மற்றும் வாஷிங் மெஷின் போன்ற வீட்டு மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் 30 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது.



அதில் பயிற்சி பெற்ற 27 சிறைவாசிகளுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் எம்.ஊர்மிளா ஆகியோர் சிறைவாசிகளுக்கு பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து, சிறைவாசிகள் கணினி பயிற்சி மேற்கொள்ளும் வகையில், 20 கணிப்பொறிகள் கொண்ட கணினி பயிற்சி மையத்தை கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் தொடங்கிவைத்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...