சிறைவாசிகள் 27 பேருக்கு தொழிற்பயிற்சி நிறைவு சான்றிதழ்

சிறைவாசிகளுக்காக கோவை மத்திய சிறையில் கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், தொழில் பயிற்சி முடித்த 27 சிறைவாசிகளுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் ஜி.சண்முகசுந்தரம் மற்றும் சிறைக்கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.


கோவை: தமிழக சிறை துறை இயக்குநர் அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சிறையில் இருந்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகள், விடுதலைக்குப் பிறகு மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடா வண்ணம் தொழில் தொடங்க அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.



அதில் கோவை மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சுயதொழில் பயிற்சி நிலையம் மூலம், மத்திய சிறைவாசிகளுக்கு ஏசி, ரெப்ரிஜிரேட்டர், மற்றும் வாஷிங் மெஷின் போன்ற வீட்டு மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் 30 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது.



அதில் பயிற்சி பெற்ற 27 சிறைவாசிகளுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் எம்.ஊர்மிளா ஆகியோர் சிறைவாசிகளுக்கு பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து, சிறைவாசிகள் கணினி பயிற்சி மேற்கொள்ளும் வகையில், 20 கணிப்பொறிகள் கொண்ட கணினி பயிற்சி மையத்தை கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் தொடங்கிவைத்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...